உனக்காக நானிருப்பேன்
எத்தனை துன்பம்
வந்தாலென்ன
உனக்காக நானிருப்பேன்!
கண்ணீரைத் துடைக்க அல்ல
அன்பே எனது கைகள்
உன்னை கைகொடுத்து
காப்பாற்ற ...!
எனது நம்பிக்கையின்
நாயகனே நீ
கலங்கி நிற்கலாகாது...!
உனது
உள்ளம் எனது
உயர்ந்த கோபுரம் - அது
உடைந்து போகக் கூடாது ...!
நித்தம் நீ
சொல்லித் தந்தாய்
வாழ்க்கை என்பது
என்னவென்று...!
ஒவ்வொருநாளும்
நம்பிக்கை தந்தவனே
நீ கலங்கி நிற்கக் கூடாது...!
நீ
வருந்தாதே சித்திரமே
உனக்காக என்றும்
நானிருப்பேன்...!
No comments:
Post a Comment