.

.

Sunday, July 31, 2011

நீ பார்க்கும் பார்வை

நீ பார்க்கும் பார்வை - காதல் கவிதைநீ பார்க்கும் பார்வை
கடவுளின் ஒளி!

நீ தீண்டும் தீண்டல்
கடவுளின் ஸ்பரிசம்!

நீ பேசும் மழலை
கடவுளின் குரல்!

நீ தரும் அன்பு
கடவுளின் அருள்!


x

மரணங்களை நான் வென்றுவிடுவேன்

மரணங்களை நான் வென்றுவிடுவேன் - காதல் கவிதைஉனது ஒரே ஒரு
புன்னகை போதும்-
மரணங்களை நான்
வென்றுவிடுவேன்!

நீ எனக்கோர் போதிமரம்...

நீ எனக்கோர்  போதிமரம்... - காதல் கவிதைநீ எனக்கோர்
போதிமரம்... உன்
நிழலில் எனது
ஞானோதயம் -
சித்தம் தெளிந்து
சிவமயமானது,
நித்தம் நீ தந்த
தூய அன்பினால்...!


x

மழைத்தூறல்

மழைத்தூறல் - காதல் கவிதைஉனது பேச்சில்
தெறிக்கும்
எச்சில் துளியில்
உள்ள இன்பம்
வான்
மழைதூறல்
கூட தருவதில்லை...!

நெஞ்சில் வைத்து

கன்னம் நனைய
கண்ணீர் வழிய,
உன்னை நினைத்து
அழவேண்டும்-
காலம் முழுவதும்
நெஞ்சில் வைத்து
உன்னை நானும்
தொழ வேண்டும்!

உன்னை நினைக்கும் பொழுதில்

மனதில் உன்னை
நினைக்கும் பொழுதில்
கவிதை வரும்...!

இதயம் உன்னை
நினைக்கும் பொழுதில்
கண்ணீர் வரும்...!

உயிரில் உன்னை
நினைக்கும் பொழுதில்
மரணம் வரும்...!


x

நம்பிக்கை கொள்

வானத்தை போல நீ
சாதிக்க
நினைக்கிறாய்...
நம்பிக்கை கொள்,
உனக்கு நானொரு
நட்சத்திரமளவாவது

நம்பிக்கை கொள் - வாழ்க்கை கவிதை

நிச்சயம் ஒளிதருவேன்!


x