நான் கொஞ்சிமகிழ ஓர்
உயிர் உருவானதை
எண்ணி எண்ணி
சுகமாய்
அனுபவித்துக் கொண்டிருந்தேன்
சிலநாட்களில் அது
அவளென்று அவனுக்குத்
தெரியவந்தது
அவன் அவர்களோடு
பேசி முடிவெடுத்தான்
அவளை கருவறுக்க
ஒரு மஞ்சள்
கயிற்றின்
முடிச்சுகளை
அவிழ்த்தெறிந்தேன்
என் உயிர்முடிச்சின்
உடனிருக்க...!
No comments:
Post a Comment