நீ ஏன் இப்படி இருக்கிறாய்?
அவ்வப்போது
கவிதைகள்
சொல்கிறது
உனது பார்வை!
எப்போதும்
காதலைக்
கொல்கிறது
உன் மௌனம்!
என்றாவது
சந்தோசம்
தருகிறது
உனது புன்னகை!
இப்போது
கண்ணீரைத்
தருகிறது
உன் வார்த்தை!
சிரித்துப் பேச
மனமில்லையென்றால்
வெறுத்துவிடு
வெறுப்பாகவே
பேசிப் பேசி
சிரிப்பை
மறந்துவிடாதே...!
No comments:
Post a Comment