.

.

Friday, October 29, 2010

நீ எந்தன் காதல் இல்லை

ஒன்றே ஒன்று மட்டும்
உன்னிடம் நான்
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் -
நீ எந்தன் காதல் இல்லை
என்று மட்டும்
மறந்தும் சொல்லிவிடாதே...

ஒருவேளை நீ
சொல்ல நினைத்தால்..,
தயவு செய்து
மன்னிக்கவும் -
அதன் பிறகு உன்னை
நிச்சயமாய் உயிரோடு
பார்க்கமுடியாது

அதாவது,
உன் உயிரென்று
நீ நினைக்கும் என்னை!


No comments: